சென்னை,

டந்த வருடம் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது  ஓபிஎஸ், ஈபிஎஸ் பார்த்தார்களா? என்பது குறித்து விளக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்துவோரின் பட்டியலை வெளியிட வேண் டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பல்வேறு தலைவர்கள் வந்து பார்த்த நிலையில், பிரதமர்  மோடி ஏன் பார்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக ஏற்கனவே அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது தமிழக அமைச்சர்களே மாறி மாறி சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவது மக்களிடையே மேலும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.