ரசியலில் ஆச்சரியம் என்பது எதுவுமில்லை என்பார்கள். அதாவது, எதுவும் நடக்கலாம் என்பது இதற்கு அர்த்தம்.

அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது ஜெயா டிவியில்.

இந்த டிவிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை அறிவித்தாலும், அது “ஜெயா” (!) டிவி என்பது ஊரறிந்த ரகசியம்.

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ டிவியாகவே பார்க்கப்படுகிறது. இந்த டிவியில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான செய்திகள் வரும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களாக.. அதுவும் “அவர்தான் 420” என்று டி.டி.வி. தினகரனும் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்துக்கொண்டதற்கு பிறகு… எடப்பாடிக்கு எதிரான செய்திகள் தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்பாகின்றன.

அதுவும், எடப்பாடியை துரோகி என விளிக்கும் இந்த க்ளிப்பிங்தான் அடிக்கடி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது… எடப்பாடி, சசிகலாவின் காலில் விழும் காட்சியுடன்.