திருவனந்தபுரம்: தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என  கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.  இதுதொடர்பான சட்டம் என்ன சொல்கிறது என்பதை விரிவாக காணலாம்.

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால், ஆபாச படங்களை இணையதளங்களில் பார்வையிடுவது, தரமிறக்குவது போன்றவை குற்றமாக கருதப்படுகிறது. பாலியல் வன்முறைகளை தடுக்கவே மாநில அரசுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும்,  ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் உலவ விட்டவர்கள், பார்த்தவர்கள்,  படங்களை அப்டோடு செய்பவர்கள்,  குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள், பகிர்ந்துகொண்டவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் என ஏராளமானோரை சென்னை சைபர் போலீசார் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தனர். ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இது சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. . ஆபாச வீடியோ பார்த்தான், ஆடியோவைக் கேட்டான் என்று குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எல்லாம் நம் தலையிலேயே மண்ணை வாரிப்போடும் செயல் என சமூக சிந்தனையாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை வயது பூர்த்தியான ஒரு தனி­ந­பர், அவ­ரது பர்­ச­னல் லேப்­டாப் அல்­லது மொபைல் போன்­க­ளில், தனி­மை­யில் வெறும் நுகர்­வோ­ராக இருந்து ஆபா­சப் படங்­க­ளைப் பார்ப்­பது சட்­டப்­படி குற்­றம் இல்லை. குற்றமில்லை என்பதை விட இதற்காக தண்டனை அளிக்க தனி சட்டம் இல்லை என்று சொல்லலாம் .

இந்தியாவைப் பொறுத்தவரை வயது பூர்த்தியான ஒரு தனிநபர்அவரது பர்சனல் லேப்டாப் அல்லது மொபைல் போன்களில்தனிமையில் வெறும் நுகர்வோராக இருந்து ஆபாசப் படங்களைப் பார்ப்பது சட்டப்படி குற்றம் இல்லைகுற்றமில்லை என்பதை விட இதற்காக தண்டனை அளிக்க தனி சட்டம் இல்லை. ஆனால், மாநில அரசுகள், ஆபாச படம் பார்ப்பதை குற்றமாக கருதி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில், கடந்த 2016-ம் ஆண்டு சாலையோரத்தில் மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த 33 வயது நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 292-வது பிரிவின் கீழ் ஆபாசமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாசப் படங்கள் பல நூற்றாண்டுகளாக நடைமுறை யில் இருப்பதாகவும், புதிய டிஜிட்டல் யுகம் குழந்தைகளுக்கும் கூட அதை அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது என்றும் கூறினார். “ மேலும், “ஒரு நபர் தனது அந்தரங்கத்தில் ஆபாசமான புகைப்படத்தைப் பார்ப்பது ஐபிசியின் 292 (ஆபாசம்) பிரிவின் கீழ் குற்றமாகாது என்று நான் கருதுகிறேன். அதேபோல், ஒரு நபர் தனது தனியுரிமையில் மொபைல் போனில் இருந்து ஆபாசமான வீடியோவைப் பார்ப்பது பிரிவு 292 ஐபிசியின் கீழ் குற்றம் அல்ல என்றும்

“குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் ஆபாசமான வீடியோ அல்லது புகைப்படங்களை பரப்பவோ அல்லது பகிரங்கமாக காட்சிப்படுத்தவோ முயன்றால், IPC 292 பிரிவின் கீழ் அது குற்றமாகும் என்றும் நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் கூறினார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த குற்றமும் இல்லை என்று கூறி, இந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதே சமயம், குழந்தைகளை மகிழ்விப்பதற்காக இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன்களை வழங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதி, இதன் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மொபைல் போன்களில் இருந்து தகவல் தரும் செய்திகளையும் வீடியோக்களையும் மட்டும் அவர்கள் முன்னிலையில் பார்க்கவேண்டும், பெற்றோர்கள் மைனர் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ஒருபோதும் மொபைல் போன்களை ஒப்படைக்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார்.

இதுமட்டுமல்லாமல், மொபைல் போன்களில் ஆபாச வீடியோக்களை மைனர் குழந்தைகள் பார்க்கத் தொடங்கினால், “தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் அல்லது கால்பந்து அல்லது அவர்கள் விரும்பும் பிற விளையாட்டுகளை விளையாட விடுங்கள். எதிர்காலத்தில் நமது தேசத்தின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக மாறும் ஆரோக்கியமான இளம் தலைமுறைக்கு இது அவசியம் என்று நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் கூறினார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்­திய தண்­ட­னைச் சட்­டம் பிரிவு 292  என்ன சொல்கிறது?

பாலி­யல் ஈடு­பாட்டை மிக­வும் அதி­க­ரிப்­ப­தா­கவோ, ஆபாச உணர்­வு­க­ளைத் தூண்­டும் வித­மா­கவோ, ஒரு­வ­ரின் மன­தைக் கெடுப்­ப­தா­கவோ இருக்­கும் எந்த வித­மான ஆபாச வீடியோ அல்­லது புகைப்­ப­டப் பதி­வு­களை விற்­பது, வாட­கைக்கு விடு­வது, பொது இடங்­க­ளில் காட்­சிப்­ப­டுத்­து­வது, பல­ருக்­குப் பகிர்­வது, இந்த ஆபா­சப் பதி­வு­களை வைத்து லாபம் சம்­பா­திப்­பது, விளம்­ப­ரப்­ப­டுத்­து­வது, தயா­ரிப்­பது உள்­ளிட்­டவை தண்­ட­னைக்­கு­ரிய குற்­றம் ஆகும்.

இந்­திய தண்­ட­னைச் சட்­டம் பிரிவு 293 :

இரு­பது வய­துக்­குக் குறை­வான ஒரு நப­ருக்கு இத்­த­கைய ஆபா­சப்­ப­டங்­களை, வீடி­யோக்­களை விற்­ப­தைத் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக வரை­ய­றுக்­கி­றது.

இந்­திய தண்­டனைச் சட்­டம் பிரிவு 294 :

ஆபா­ச­மான பாடல்­கள் பாடு­வது, பொது இடங்­க­ளில் ஆபா­ச­மாக நடந்­து­கொள்­வது ஆகி­ய­வற்­றைத் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றம் என்­கி­றது.

தக­வல் தொழில்­நுட்ப சட்­டம் பிரிவு 67 :

 இந்­தச் சட்­டம், ஒரு­வர் ஆபா­சப் படங்­க­ளைத் தனி­மை­யில் பார்ப்­ப­தைக் குற்­ற­மாக வரை­ய­றுக்­க­வில்லை. மாறாக, அந்­தப் படங்­களை மின்­னணு வடி­வில் வெளி­யிட்­டால் அல்­லது பகிர்ந்­தால் அவர் குற்­றம் புரிந்­த­வர் ஆவார். இந்­தச் சட்­டம், குழந்­தை­க­ளின் ஆபா­சக் காணொ­ளி­கள், படங்­கள் ஆகி­ய­வற்றை வெளி­யி­டு­வது, பகிர்­வது மட்­டு­மின்­றிப் பார்ப்­ப­தும் கூட குற்­றம் என்­கி­றது. மேலும் இந்­தச் சட்­டம் தக­வல் தொழில்­நுட்ப சட்­டப் பிரி­வு­க­ளின் கீழ் குற்­றம் இழைப்­ப­வர்­க­ளுக்கு அப­ரா­த­மும், ஐந்­தாண்­டு­கள் வரை சிறைத்­தண்­ட­னை­யும் வழங்­கு­கி­றது.
போக்ஸோ சட்­டம்.

போக்ஸோ சட்­டம் 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்­தப்­பட்ட `போக்ஸோ’ சட்­டத்­தின்­படி, குழந்­தை­க­ளைப் பாலி­யல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை வரை­யும், குழந்­தை­க­ளின் ஆபா­சப் படங்­களை வெளி­யி­டு­ப­வர்­கள், பரப்­பு­ப­வர்­கள், பார்ப்­ப­வர்­கள் மீது மிகக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான சட்­டப்­பி­ரி­வு­க­ளும் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக குழந்­தை­க­ளின் ஆபா­சப் படங்­கள் அதா­வது சைல்டு போர்­னோ­கி­ராபி என்­றால் என்ன என்­ப­தன் விளக்­கம் மறு­வ­ரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய சட்­டத்­தின்­படி , புகைப்­ப­டம், வீடியோ டிஜிட்­டல் படம் அல்­லது கணி­னி­யில் உரு­வாக்­கிய படம் என எந்த வடி­வில் குழந்­தை­களை ஆபா­ச­மாக சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அந்த படம் குழந்­தை­களை வைத்து நேர­டி­யாக உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அல்­லது குழந்­தை­க­ளின் படத்தை எடிட் செய்து சேர்த்­தி­ருந்­தா­லும்­கூட அது சட்ட விரோ­தமே. மேலும் பெரி­ய­வர்­கள் சிறி­ய­வர்­க­ளைப் போல நடித்­தி­ருந்­தா­லும் அது சைல்டு போர்­னோ­கி­ராபி’ எனும் வகைப்­பாட்­டில்­தான் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், மாநில அரசுகள், பாலியல் அசம்பாவிதங்களை தடுக்க,  குழந்­தை­க­ளின் ஆபா­சப் படங்­க­ளைப் பார்த்­த­வர்­கள், பதி­வி­றக்­கம் செய்து வைத்­தி­ருப்­ப­வர்­கள், பகிர்ந்­த­வர்­க­ளைப் பட்­டி­யல் தயா­ரித்து வைத்­தி­ருக்­கும் காவல் துறை, அவர்­க­ளின் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றது.