டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவன ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றிபெற்று, அதை கைப்பற்றி உள்ளது. இதை வரவேற்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

Welcome back, Air India  என்று உற்சாக பதிவிட்டுள்ளார். அத்துடன்  புகைப்படத்துடனான சிறு குறிப்பையும் வெளியிட்டு உள்ளார்.

அதில், இந்தியன் ஏர்லைன்ஸை டாடா சன்ஸ் மீண்டும் கைப்பற்றிய இருப்பதற்கு, தனது தாத்தா ஜே.ஆர்.டி. டாடா  இன்று நம் மத்தியில் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார், தனது புகழை மீண்டும் பெறும் வாய்பை பெற்றிருப்பார் என்று அவரது நினைவுகளை தெரிவித்துள்ளதுடன்,

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களைத் தனியார் துறைக்குத் திறக்கும் மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கையை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்றியது டாடா! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!