சேலம்

வ்வொரு வியாழக்கிழமையும் மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

 

தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவையில் வசித்து வருகின்றனர். தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே ரயில் இயக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருச்செந்தூர், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சென்று வர இந்த ரயிலை இரவு நேரத்தில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே புதிய வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி தூத்துக்குடியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (எண்: 16766) மறுநாள் காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். 

மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி விரைவு ரயில் (எண்: 16765) மறுநாள் காலை 4.20 மணிக்குத் தூத்துக்குடி ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது, கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.” 

என்று கூறப்பட்டு உள்ளது.

ஆனால் எந்தத் தேதியில் இருந்து இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை.