டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம்  அணிவது மீண்டும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் முகக்கவசம் கட்டாயம் என உத்தரவிட்ட நிலையில், தற்போது டெல்லி மாநில அரசும் முக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்து உள்ளது.

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 15ஆயிரம் முதல் 20ஆயிம் வரை ஏறி இறங்கி காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் தினசரி 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தினசரி பாதிப்பு 18 சதவிகிதமாக உள்ளது.   நேற்றைய நிலவரப்படி 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் தொற்று விகிதம் 17.83 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 8,205ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 32 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து,   முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் இன்று (ஆக 11) நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதிக்கப்பட்டது.  இந்த கூட்டத்திற்கு பின் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லியில் அலுவலகம், பூங்கா, மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சொந்த காரில் பயணம் செய்பவர்களுக்கு இந்த அபராதம் பொருந்தாது. இதனை மீறுபவர்களுக்கு ரூ. 500 அபாராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.