மேட்டூர்:

ர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 2வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 34ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நேற்று விநாடிக்கு 26,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.  இத்துடன் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34 ஆயிரத்து 722 கனஅடியாக உள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரத்து 722 கனஅடி நீர் வந்துகொண்டு உள்ளது. அதுபோல  அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் நீர்திறக்கப்படுகிறது. மேலும் அணையின்,  கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.83 அடியாக உள்ள நிலையில், நீர்இருப்பு 85.46 டி.எம்.சி. ஆக உள்ளது.

காவிரியில் இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்தால் சில நாட்களில் மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளவான 120 அடியை  எட்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.