சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில்  ஆட்சி மலர உதவுங்கள் என கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்ரது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழக சட்ட மன்ற தேர்தல்  நாளை (ஏப்ரல் 6-செவ்வாய்க்கிழமை)  நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 6 கோடியே 29 இலட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையைப் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
இந்த  தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக 173 தொகுதிகளிலும் ம.தி.மு.க. 6 தொகுதிகளிலும் மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி 3 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி 1 தொகுதிகளிலும் பார்வர்டு பிளாக் 1 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலும், 25 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு வேட்பாளர்களுக்கு ‘கை’ சின்னத்திலும், 6 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சீய கம்யூனிஸ்டு கட்சிக்கு வேட்பாளர்களுக்கு ‘அரிவாள் சுத்தியல்’ சின்னத்திற்க்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘கதிர் அறிவாள்’ சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லிக் போட்டியிடும் 3 தொகுதிகளான கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு ஏணி சின்னத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளில் பானை சின்னத்திலும் வாக்களித்து,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி மலர உதவுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.