சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்ன வேண்டுகோள் விடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மூத்த காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம்,சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிதம்பரம் பிரசாரம் செய்து வந்தார். பிரசாரம் ஓய்வடைந்த நிலையில், திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து டிவிட் பதிவிட்டுள்ளால், அதில்,
நாளை நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
வாராது வந்த மாமணி போல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தல்கள் வந்திருக்கின்றன. 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை அஇஅதிமுக அரசு நடத்தவில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நம்முடைய நகரத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்றக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிபெற வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.