சென்னை: தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும் என  ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா  அவரது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.

மறைந்த அதிமுக தலைவியும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 73வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  ஜெ. உருவப்படத்துக்கு, அவரது உடன்பிறவா தோழியும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையானவருமான  சசிகலா மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவரது ஆதரவாளர்களுக்கு இனிப்பு வாங்கியவர்,  தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது,  உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தல்களில் கட்சியின் வெற்றியை நோக்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் கட்சித் தொழிலாளர்களையும் மக்களையும் மிக விரைவில் சந்திப்பேன் என்றவர், மாண்புமிகு அம்மா கோடானுகோடி தொண்டர்களை விட்டுச் சென்றுள்ளார் என தொண்டர்கள் மத்தியில்  பேசியவர்,  தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.