அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “’கடந்த  இரண்டு நாட்களாக நடக்கும்  நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமையத்தில், பதினைந்து நாட்கள் நான்  மருத்துவமனையில் இருந்தேன். சசிகலா மற்றும் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. ஜெயலலிதா, இறந்தார் என்ற செய்தி கேட்டு சசிகலா ஒரு துளி கண்ணீர் விடவில்லை’ என்று பி.ஹெச். பாண்டியன் தெரிவித்தார்.