விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடித்த ஆர்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘இன்று நேற்று நாளை’. இப்படம் 2015-ம் ஆண்டு வெளியானது

முதல் பாகத்தை எழுதி, இயக்கிய ஆர்.ரவிகுமார், இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். முதல் பாகத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக், இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், கருணாகரன் மீண்டும் 2-ம் பாகத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்க , வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படம் அடுத்த வருடம் (2020) கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.