டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய விருதையும் திருப்பி தரத் தயார் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில், அரியானா – டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கலந்து கொண்டார். விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், மத்திய அரசு கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பதாக கூறினார். விளையாட்டு துறையில் மிக உயரிய விருதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.