டெல்லி: பாகுபாடுகளில் இருந்து விடுவிக்க உழைப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாகுபாடற்ற நாட்டை உருவாக்குவது தான் அம்பேத்கருக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

தேசத்தை கட்டமைப்பதில் அம்பேத்கரின் பங்களிப்பை நாம் இன்று நினைவில் கொள்கிறோம். இந்தியாவை அனைத்து வித பாகுபாடிலிருந்தும் விடுவிப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்று பதிவிட்டுள்ளார்.