டிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இவர் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றி படித்து வந்தார். நீண்ட நாட்களுக்கு முன்பே சென்னை திரும்புவதாக இருந்த நிலையில் கொரோனா லாக் டவுனால் விமானங்கள் இல்லாதநிலையில் ஜேசன் சென்னை திரும்ப முடியவில்லை.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு விமானங்கள் இயக்கப்படதையடுத்து ஜேசன் சென்னை திரும்பினார். 14 நாட்கள் நடத்திர ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் 14 நாட்கள் முந்ததும் வீடு திரும்பினார்.
சினிமா துறை பற்றி படித்திருக்கும் ஜேசன்
நடிப்பில் ஈடுபடுவாரா அல்லது டைரக்‌ஷனில் ஈடுபடுவாரா என்பதுபற்றி இன்னும் தெரிய வில்லை. முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி ஜேசனை தான் தயாரிக்கும்ம் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைப்பதாக விஜய்யிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகின, இந்தியா திரும்புவதற்கு முன் உடன் படித்த மாணவர்களுடன் குரூப் படம் எடுத்துக்கொண்டார்.
கடந்த 2010 ம் ஆண்டு திரைக்கு வந்த வேட்டைக்காரன் படத்தில், ’நான் அடிச்சா தாங்க மாட்டே..’ பாடலில் விஜய்யுடன் இணைநது ஜேசன் சஞ்ஜய் நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.