நெய்வேலி:

ன்எல்சியில் நடைபெற்று வரும் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் விஜய் மீண்டும் கலந்துகொண்டார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிகில் படம் வருமானம் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம், நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உள்பட பலரது வீடுகள், அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது. அதைத் தொடர்ந்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த  நடிகர் விஜய்யையும் விசாரணைக்கு சென்னை அழைத்து வந்தது. இதனால் விஜய் நடிக்கும் காட்சிகள் ஒத்திவைக்கப்பட்டு,  நடிகை ஆண்டிரியா, விஜய்சேதுபதி உள்ளிட்டோரை வைத்து படப்பிடிப்பு நடைபெற்றது

வருமான வரித்துறையினர் விசாரணை முடிவடைந்த நிலையில், நெய்வேலியில் நடைபெற்று வரும்  மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் விஜய் இன்று மீண்டும் கலந்து கொண்டார். நெய்வேலி என்எல்சி ஆலை  2ம் எண் சுரங்கத்தில், அப்படத்தின் சண்டை காட்சி படம்பிடிக்கப்பட்டு வருகிறது.