சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ .

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்‌ஷன் , பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

மாநாடு படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியிடம் பேசி வந்தனர். ஆனால் அவர் நடிக்கவில்லை. அரவிந்தசாமிக்கு பதிலாக வில்லன் வேடத்துக்கு எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என தெரிவித்திருந்தார் .

அதன்படி பிப்ரவரி 19-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் பூஜையுடன் பிப்ரவரி 19-ம் தேதியே நடைபெறவுள்ளது. அதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவுள்ளனர்.