ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது தனது ஜெர்சியை கண்டுபிடிக்க மோப்பம் பிடித்த அஸ்வின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

ஞாயிறன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 12 அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டியில் நடைபெற்ற சம்பவம் இந்திய ரசிகர்களிடையே சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.

டாஸ் போடுவதற்காக ரோஹித் சர்மா மற்றும் கிரேக் இர்வின் ஆகியோர் மைதானத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர்களுக்குப் சற்று தொலைவில் பின்னால் நின்று கொண்டிருந்த அஸ்வின் அங்கிருந்த இரண்டு ஜெர்சியில் எது தனது ஜெர்சி என்பது தெரியாமல் குழம்பி போனார்.

பின்னர் அந்த இரண்டு ஜெரிசியையும் முகர்ந்து பார்த்து அதில் ஒன்றை அங்கேயே போட்டுவிட்டு அவருடையதை எடுத்துச் சென்றார்.

தனது ஜெர்சியை கண்டுபிடிக்க அஸ்வின் மேற்கொண்ட இந்த நூதன முயற்சி தற்செயலாக டி.வி. கேமராவில் பதிவானது. இந்த பகுதியை மட்டும் ரசிகர் ஒருவர் நேற்று ட்விட்டரில் பதிவிட அது வைரலானது.

இதுகுறித்து மீம்கள் தவிர கமெண்டுகளும் அதிகளவில் பகிரப்பட்டது, “வாழ்நாளில் ஒருமுறையாவது நாம் இதுபோன்ற ஒரு அனுபவம் பெற்றிருப்போம்” என்று ஒருவரும், “அஸ்வின் ஹாஸ்டலில் தங்கி இருந்திருப்பார் போலும்” என்று சிலரும் பதிவிட்டுள்ளனர்.