தனது அடுத்தப்படம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

தற்போது இவர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. அவர் இயக்கும் 10-வது படமாக இது உருவாகவிருக்கிறது.

‘வெங்கட் பிரபுவின் விரைவு’ எனக் குறிப்பிட்டு தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.