சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பு  செய்தும் உத்தரவிட்டு உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு விதிக்கக்கோரி வேலுமணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்தது, உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்பி வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணையை ஒத்திவைத்துள்ளது.