துரை

பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையைத் தொடங்கி உள்ளனர்.

மதுரையில் புது சிறை வீதி மில் காலனியில் வசிக்கும் பாக்கியம் எனும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆரம்பத்தில் 5 பேருடன் மதுரையிலிருந்து நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டார். பிறகு ஒவ்வோர் ஆண்டும் இவருடன் இணைந்து பாதயாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

இவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு சுமார் 180 பேர் மட்டுமே சென்றனர்.   இவரிடம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 3வது வாரம் புதன்கிழமை ஜெபமாலை அணிந்து திரளான பக்தர்கள் 40 நாட்கள் ஜெப, தவ முயற்சிகள் மேற்கொண்டு ஜூலை மாதம் கடைசி சனிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் வேளாங்கண்ணி சென்றடைகின்றனர்.

நேற்று நடப்பு  ஆண்டு பாதயாத்திரையாக மதுரையிலிருந்து புறப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வெள்ளிக்கிழமை வேளாங்கண்ணி சென்றடைகின்றனர். பாதயாத்திரையாகச் செல்பவர்களின் குடும்பத்தினர் வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் இவர்களை வரவேற்று ஆலயம் அழைத்துச் செல்கின்றனர்    இந்த யாத்திரிகர்களுக்கு 6 நாட்களும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் தன்னார்வலர் டேனியல் பிரபாகரன் தலைமையில் பவுல், நாராயணன், சார்லஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.