சென்னை

சென்னை வேளச்சேரியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.   வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்; வேளச்சேரி தொகுதியில் போட்டி இடுகிறார்.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  அவ்வகையில் சந்தோஷ் பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி ஆகி உள்ளது   இது குறித்து சந்தோஷ் பாபு, ”எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எனது வேளச்சேரி வாக்காளர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் உங்களை எல்லாம் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து உங்கள் வாழ்த்துக்களைப் பெற  எண்ணிய நிலையில் இவ்வாறு நடந்துள்ளது துரதிருஷ்ட வசமாகும்.   நான் டிஜிடல் முறையில் இனி வாக்கு சேகரிக்க உள்ளேன்.  எங்கள் கட்சியினர் உங்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளனர்.  மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களிப்பீர்” எனத் தெரிவித்துள்ளார்.