மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொரோனாவை வென்று விட்டதாக காணொளி காட்சி மூலம் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் அமித் ஷா பேசியிருந்தார்.

தொலைநோக்கு செயல்திட்டம் இல்லை என்பதையும் பிரச்சனையின் புரிதல் இல்லாததையும் மறைக்க அந்த பிரச்சனையை உதாசீன படுத்துவது பா.ஜ.க. வின் முதல் வேலை, அதனை தொடர்ந்து,

அடுத்ததாக பொய்யையும் கட்டுக்கதைகளையும் அவிழ்த்துவிட்டு அந்த இக்கட்டான சூழலை தாங்கள் வென்று விட்டதாக வெற்று கூச்சல் இடுவார்கள்.

இந்த கட்டுக்கதைகளையும் மீறி பிரச்சனை தொடரும் நிலையில், அதை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது அவர்களின் அடுத்த வேலை.

நிலைமை சற்று முன்னேற்றம் ஏற்படும் போது, சங்கிகளின் படையுடன் வந்து தாங்களால் தான் எல்லாம் நடந்தது போல் பாவ்லா காட்டுவார்கள்

என்று பிரசாந்த் கிஷோர் கூறியதை மேற்கோள் காட்டி அமித் ஷா வின் வெற்று கூச்சலுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் வாழப்பாடி இராம. சுகந்தன் பதிலடி கொடுத்திருக்கிறார்.