சென்னை

தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகைக்குச் சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க உள்ளது. 

தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகை மற்றும் தொடர்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.

”வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் நோக்கிச் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.” 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.