இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் போது சில காரணங்களால் வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் மீண்டும் நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்ற அறிவுப்புகள் வெளியானது.

தற்போது வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தலைநகரம், மருதமலை, படிக்காதவன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகும் நாய் சேகர் படத்தில் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.