சென்னை:
“தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பேசிய அவர், கிராமப்புறங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1745 கிராமங்களுக்கும் செல்ல 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோநாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போட்டு கொள்வதும் மற்றும் முககவசம் அணிவதும் அவசியமாகும் என்று தெரிவித்தார்.