சென்னை:
டுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கிடைக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. மாநில அரசின் நேரடி கொள்முதலும் அதிகளவு கிடைக்கவில்லை. இதனால், அடிக்கடி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்றும், தடுப்பூசி வந்த பின் அறிவிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.