இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வாழ்’ .

இந்தப் படத்துக்கு, ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட் செய்துள்ளார்.

பிரதீப் குமார் இசையமைப்பில், குட்டி ரேவதி, அருண் பிரபு, பிரதீப் குமார் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தப் படம், ஜூலை 15-ம் தேதி முடிந்தது. இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்து, தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக, ஓடிடியில் ‘வாழ்’ வெளியாகவுள்ளது. சோனி லைவ் நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

தற்போது ஜூலை 16-ம் தேதி ‘வாழ்’ வெளியாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.