சென்னை: 
கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான  200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்திய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இது குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கும் 33 உதவி வருவாய் அலுவலர்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 7 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.