சென்னை: நவம்பர் 25 முதல் குறிப்பிட்ட சில ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கீழ்க்கண்ட 9 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்களை வரும் 25ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க அனுமதி வழங்கப்படுவதாக  தெரிவித்துள்ளது. அதன்படி,

மதுரை-புனலூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16729), புனலூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16730) எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

மங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண் (22609), கோவை-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (22610) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16605), நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16606) எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயில் எண் (12605), காரைக்குடி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12606) பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12635), மதுரை-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12636) வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16191), நாகர்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16192) அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்-கோவை இடையே இயக்கப்படும் ரயில் எண் (12679), கோவை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12680) இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16791), பாலக்காடு-நெல்லை இடையே இயக்கப்படும் ரயில் எண் (16792) பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (16649) பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் எண் (16650) பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.