சென்னை: தொகுதி மறுவரையறை  குறித்து உண்மைக்கு புறம்பாக பொய் பேசிய ஸ்டாலின் முகத்தில் மத்திய பாஜக அரசு கரி பூசிவிட்டது ,  ஸ்டாலின் மே 4-க்கு பிறகு கருப்புச் சட்டை போட்டுக்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எண்ணிக்கை குறைந்துவிடும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.. மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால்,   நான் ஏற்கனவே  இதுகுறித்து,  தெளிவுபடுத்தினேன். தமிழ்நாட்டிற்கு விழுக்காடு குறையாது என்று கூறினேன். ஆனால்,   அதன்பிறகும் வேண்டு மென்றே ஸ்டாலின் கருப்புச் சட்டை போட்டிருக்கிறார் என   விமர்சித்த எடப்பாடி, தற்போது, மத்திய பாஜக அரசு ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டது என்றார்.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென் மாநிலங்களின் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள் 129-லிருந்து 195-ஆக உயரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயரும்.கர்நாடகா: 28-லிருந்து 42, ஆந்திரப் பிரதேசம்: 25-லிருந்து 38, கேரளா: 20-லிருந்து 30, தெலுங்கானா: 17-லிருந்து 26 ஆக உயரும்.
இந்த மறுவரையறை 2029-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்தப்படாது என்றும், தற்போதுள்ள தொகுதிகளே தொடரும் என்றும் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில்,  சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) நேற்று பல்லடம் திருப்பூர் சாலையில் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது
“திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேடை ராதாகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், காங்கேயம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன், பல்லடம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம், தாராபுரம் தொகுதியில் திருமதி.சத்யபாமா ஆகிய ஐந்து பேருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியில் தங்கராஜ்க்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அமமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதியில் சி.சண்முகவேலுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். ஏழு பேரும் முத்தான வேட்பாளர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள், சேவை செய்ய வாய்ப்பைத் தாருங்கள், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசியவர், “ ஸ்டாலின் கருப்புச் சட்டை போட்டிருக்கிறார், மே 4ம் தேதிக்கு பிறகு கருப்புச் சட்டை போட்டுக்கொள்ளுங்கள். இப்போது எதற்கு கருப்புச்சட்டை? அம்மா அவர்கள் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33% இடஒதுக்கீடுக்கு முதலில் குரல் கொடுத்தார்.

1998ல் அம்மா வேண்டுகோளை ஏற்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஒப்புக்கொண்டார், தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக அந்த மசோதாவை தாக்கல் செய்தார். இப்போது இந்தியா கூட்டணியில் உள்ள முலாயம்சிங் யாதவ் அந்த மசோதாவை தம்பிதுரையிடம் இருந்து பிடுங்கி கிழித்தெறிந்தார். அப்போது நின்றுபோனது. அம்மா அப்போதே அமல்படுத்த முயன்றார்.

இன்று பிரதமர் மோடி பெண்களுக்குச் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றப்பட்டு, இன்று வடிவம் கொடுக்கிறார்கள். நாடாளுமன்றதொகுதி மறுவரையறை செய்கிறார்கள். அதற்கு ஸ்டாலின் கருப்புச் சட்டை போட்டார், ஊர் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றச் சொன்னார். நான் வரும் வழியில் எங்கேயும் கருப்புக் கொடி பார்க்கவில்லை.

ஏனென்றால், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிறார்.  நான் ஏற்கனவே தெளிவுபடுத்தினேன். தமிழ்நாட்டிற்கு விழுக்காடு குறையாது என்று சொல்லிவிட்டார், அதன்பிறகும் வேண்டுமென்றே கருப்புச் சட்டை போட்டிருக்கிறார். அமித்ஷா பேசியதை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், அதை தண்ணீரில் தான் எழுதி வைக்கவேண்டும் என்றார். இப்போது நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டது பாஜக தமிழ்நாட்டுக்கு 59 தொகுதிகள் என்று அறிவித்துவிட்டார். ஏற்கனவே 7.18% இருக்கிறது, ஸ்டாலின் குறைந்துவிடும் என்றார். இப்போது 7.23% ஆகியிருக்கிறது. .5% கூடியிருக்கிறது. இப்போது சட்டையைக் கழற்ற வேண்டியதுதானே.  ஒன்றும் தெரியாத முதல்வர். உளவுத்துறை அவருக்கு கருப்புச் சட்டையை கழற்றிவிடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக தொகுதிகளை உயர்த்துகிறது. நமது கோரிக்கை நிறை வேற்றப்பட்டது, 

இந்த விஷயத்தில் மக்களை குழப்பிய இன்னொருத்தர் சிதம்பரம். அமித்ஷா சொன்னதை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், அதெல்லாம் நடக்குமா என்று கேட்டார். நடந்துவிட்டது. சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்,

இப்போது நீங்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களைப் பார்ப்பீர்கள். உள்துறை அமைச்சராக, நிதியமைச்சராக இருந்து தமிழகத்துக்கு எதுவும் செய்யாதவருக்கு நம்மை பற்றி பேச தகுதி இருக்கிறதா? நிதியை அள்ளிக் கொடுத்திருக்க வேண்டாமா..? அதற்கு மனசு வராது. ஓட்டு வாங்கும் வரை பேசுவார்கள், ஓட்டு வாங்கியதும் மறந்துவிடுவார்கள்.

நீங்கள் மூத்தவர். நாங்கள் பேசினால் நன்றாக இருக்காது. ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினால் வாங்கிக் கட்டிக்கொள்வீர்கள். நமக்கு ஒன்றும் தெரியாதாம், நாங்கள் சாதித்துவிட்டோம். நாங்கள் வைத்த வேண்டுகோளை நிறைவேற்றினார்கள். அவதூறு பரப்பி ஸ்டாலினும், கூட்டணித் தலைவர்களும் அறிக்கை கொடுத்தார்கள். இப்போது அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டாகிவிட்டது. அதிமுகவை பலவீனமாக நினைக்காதீர்கள், அதிமுக தொண்டருக்கு இருக்கும் வலிமை கூட முதல்வருக்கு இல்லை.” என்று விமர்சித்தார்.

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு

[youtube-feed feed=1]