சென்னை: நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
மேலும, கட்சி தொடங்கப்போவதில்லை என்ற ரஜினியின் முடிவு வரவேற்கத்தக்கது. தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆழமாக சிந்தித்து ரஜினி நல்ல முடிவு எடுத்துள்ளார்.ரஜினி முடிவு எடுத்தது போன்று கமலும் முடிவு எடுக்க செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக இரண்டாக உடையும் என திமுக தலைவர் விமர்சனம் செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு, கட்சி செல்வாக்கைச் சீர்குலைக்க மு க ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் உருவெடுத்துள்ளார்கள் என முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் குறிப்பிட்டவர்,
நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குப் புதிதாகச் சீருடை வழங்கப்படவுள்ள நிலையில் சீருடை அணியாமல் யாரும் நியாயவிலைக்கடைகளில் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.