சென்னை

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே.  மத்திய அரசு பல முறை திட்டங்கள் தீட்டி விட்டு அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.

இன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில்,

”ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், சுங்கச்சாவடி ஊழல் என ஊழலின் மொத்த வடிவமாக மாறிப்போயுள்ளனர்.

ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட ஜி 20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது.

இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி – மதம் – கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் ‘இந்தியா’வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி.”

என்று பதிவிட்டுள்ளார்.