செனனை

சென்னை  உயர்நீதிமன்றத்தில்  பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையானது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது,

அப்போது உதயநிதி ஸ்டாலின்தரப்பில்;

”பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார். மனுதாரர் சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.  

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஆதாரங்களைக் கேட்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.  

ஆகவே மனுதாரர்கள்தான் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்  அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்காவிடில் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” 

என வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.