தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கொலை குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குற்ற வாளிக்கு காயம் ஏற்பட்டது. அவரை கன்கவுன்டர் செய்யும்விதமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி பகுதியில் பல கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வர் முத்துக்குமார. இவரை போலீசார் பல முறை பிடிக்க முயன்றும், அரிவாளை காட்டியும், வெட்டியும் தப்பி ஓடிவிடுவார்.

இந்நிலையில், முத்துக்குமார் தூத்துக்குடி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவரை  போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

ஆனால், போலீசை அரிவாளால் வெட்டிவிட்டு முத்துக்குமார் மீண்டும் தப்பிவிட முயன்றுள்ளார்.  அதையடுத்து போலீசார் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதன் காரணமாக ஓட முயற்சித்த முத்துக்குமாரை போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் என்கவுன்டர் நோக்கிலேயே முத்துக்குமார்மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.