சென்னை

மிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

த்மிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19-ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர். எனவே, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும் , ஜனவரி 3 மற்றும் 5 ஆம் தேதியும் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி 9, 10-ம் தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஜனவரி 19 வரை வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தனர்.

இன்று சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில்  நடைபெற்ற இந்த. பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

,இன்று இரண்டு அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையொட்டி பிப்ரவரி 7ஆம் தேதிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் தனி இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.