டிகை திரிஷா தனது ஒரு செல்ஃபி பகிர்ந்து இணையம் முழுவதும் கவர்ச்சி தீ பரவவிட்டிருக்கிறார். நீண்ட நாட்க ளுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதில் தனது வலது மார்பில் ஒரு புதிய டாட்டூ அதாவது பச்சை குத்தியதை வெளிப் படுத்துவதாக அந்த செல்ஃபியை பகிர்ந் துள்ளார். அத்துடன் சில புள்ளிகள்போல் ஆங்காங்கே சூரிய ஒளிபடுவதுபோலவும் கவித்துவமான ஸ்டில்லாக இதை படமெடுத்திருக்கிறார்.

திரிஷாவின் இந்த செல்பி படம் அவரது ரசிகர்களை கிரக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. “களங்கமற்ற மனதின் நித்திய சூரிய ஒளி! மனநிலை… மற்றும் உங்களுடையதா? ” என படத்துக்கு கேப்ஷன் தந்திருக்கிறார்.
இப்படத்தை 12 மணி நேரத்திற்குள், சுமார் இரண்டரை லட்சம் பேர் பார்த்து லைக்ஸ் கொடுத்திருக்கின்றனர். அவரது இன்ஸ்டா கிராமில் அவருக்கு கிட்டத் தட்ட 2.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
வீட்டிலிருந்தபடியே ஷூட்டிங்கில் கலந்துகொண்டவர் திரிஷா. கொரோனா ஊரடங்கில் கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த நம்பர் என்ற குறும்படத்தில் நடித்தார். இதே குறும் படத்தில் சிம்புவும் அவரது வீடிலிருந்து போனில் திரிஷாவுடன் பேசுவது போல் நடித்தார்.