நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் த்ரிஷா.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சைக்கிள் ஒன்றை ஓட்ட தயாரான நிலையில், ”நல்ல மனநிலையில் இருந்து ஒரு சவாரி, இது என்னோட புதிய விஷயம்” எனக் குறிப்பிட்டு அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் சைக்கிளுடன் ஃபோட்டோ போடுவது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

https://www.instagram.com/p/CROHV9Osv6K/