சென்னை: திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என கூறிய நிலையில், தற்போது  தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம். அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அக்கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.
இதுகுறித்து,  தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் பேசி திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க முயற்சி எடுப்போம் என்று கூறினார்.