திருச்சி:

ரண்டு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் மது அருந்தி விட்டு குடிபோதையில் சாலையில் மயங்கி கிடந்தனர்.  அவர்களை ஆசிரியர்களே தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த ஒரு  வேதனை சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் உள்ள பாரதியார் நகர் பகுதியில் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. நேற்று இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் பள்ளி நடந்து கொண்டிருக்கும் போதே யாருக்கும் தெரியாமல் பள்ளியில் இருந்து வெளியேறி அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையில் உள்ள பாருக்கு சென்று மது வாங்கி குடித்தாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு போதை அதிகமாகவே அவர்கள் இருவரும் மிகவும்  தள்ளாடியுள்ளனர்.  மது போதையுடனேயே மீண்டும் பள்ளிக்கு செல்ல முயன்ற இவர்கள் போதை தாங்க முடியாமல் பாரதியார் நகர் பஸ் நிறுத்தம் அருகில் மயக்கம் போட்டு சுருண்டு விழுந்துள்ளனர்.

பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்கள் இருவர் குடி போதையில் அங்கே விழந்து கிடப்பதை பார்த்த மக்கள் பள்ளிக்கு தகவல்  அளித்தனர். உடனடியாக அங்கு வந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை தெளிய வைத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மதுவை எதிர்த்து பல்வேறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களே போதைக்கு அடிமையாகி, மயக்கத்தில் ரோட்டிலேயே மயங்கி விழுந்ததை கண்ட பொதுமக்கள் மனம் வேதனையடைந்தனர்.

”பாரு”க்குள்ளே நல்ல நாடு