சென்னை

பிற மாநிலங்களுக்குச் சென்னை சென்டிரலிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘மிக்ஜம்’ புயலால் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை சென்டிரலில் இருந்து பிற மாநிலங்களுக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முழு நேரமாக ரத்து செய்யப்பட்டது. 

இதில், சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத் செல்லும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12603), கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22640), திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் (12696/ 22208), கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16102), சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (20605), மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (22672), சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயில் ரயில் (12623) ஆகிய ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. 

சென்னை எழும்பூர் – செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் (20681) தாம்பரத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் – மைசூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12609) சென்னை கடற்கரையில் இருந்தும், சென்னை சென்டிரல் – மங்களூரு செல்லும் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (22637) திருவள்ளூரில் இருந்தும், சென்னை சென்டிரல் – மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12609) சென்னை கடற்கரையில் இருந்தும், சென்னை சென்டிரல் – ஜோலார்ப்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16089) அரக்கோணத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் – ஆமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22919) திருவள்ளூரில் இருந்தும், சென்னை சென்டிரல் – பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12607) காட்பாடியில் இருந்தும் நேற்று இயக்கப்பட்டது.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது