சென்னை

சென்னையில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே பாலம் பணி நடப்பதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னை நகரில் உள்ள பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது.  அதையொட்டி இந்த நிலையங்கள் வழியாகச் செல்லும் விரைவு ரயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஈரோடு – சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில் (வண்டி எண்.22650) ஜூன் 11, 13-ம் தேதிகளில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22652), கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12658) ஆகியவை வரும் 13-ம் தேதி சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.

தன்பாத் -ஆலப்புழா விரைவு ரயில் (வண்டி எண்.13351), இந்தூர் – கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில்(22645) இன்றும், நாளையும் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.