சென்னை 

இன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கடந்த 30 ஆ தேதி அன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அங்கு விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் சர்வீஸ் சாலை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் அரசு பேருந்துகள் செல்லும் சாலையில் பள்ளி பேருந்துகள் செல்லக்கூடாது எனப் போக்குவரத்து போலீசார் திருப்பி அனுப்புவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி  காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போத் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலை வழியாகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். காவல்துறையினர் வேண்டுகோளையொட்டி போராட்டம் நிறூத்த்ப்பட்டது.

இந்த போராட்டத்தால் இந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இங்கு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.