சென்னை

சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்காததற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இன்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த புத்தக கண்காட்சியைtஹ் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தகக் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக இருந்த நிலையில் தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியைத் தொடங்கி வைக்க இயலவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிட்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்,

”சென்னையில் நடைபெறும் 47 ஆவது புத்தகக் கண்காட்சி பெரும் வெற்றி அடையட்டும். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி. கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருதுகள் பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியைத் தொடங்கி வைக்க இயலாததற்கு வருந்துகிறேன்”. 

என்று தெரிவித்துள்ளார். regretted