சென்னை

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமலஹாசனால் தொடங்கப்பட்டு நடத்தப்படும் கட்சி மக்கள் நீதி மய்யம் ஆகும். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனது கட்சி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என கமலஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் இந்த தேர்தலில் டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கியதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தமிழ்நாட்டுக்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தர வந்தவர்கள் என்பதால் எங்களுக்கு இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ள்து” என குறிப்பிட பட்டுள்ளது.