ரோடு

நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இன்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுல்லது.

அதில்,

“நாளை திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையொட்டி ரயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில்) ஈரோட்டிலிருந்து காலை 6.25 மணிக்குப் புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். ரயில் நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இதே போல் ரயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது. இந்த ரயிலும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.”

எனக் கூறப்பட்டுள்ளது.