சென்னை

சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உலகக்  கோப்பை கிரிக்கெட் போட்டியின் சீட்டுகள் நாளை விற்பனை ஆகிறது.

அக்டோபர் 3 முதல் நவம்பர் 19 வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வரும் அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது. டிக்கட்டுகள் நாளை இரவு 8 மணி முதல் ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன

நேற்றே மாஸ்டர் கார்டு பயனாளர்களுக்கு மட்டும் டிக்கெட் விற்பனை தொடங்கியது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் டிக்கெட்டுகள்அனைத்தும் விற்று தீர்ந்தன.

வரும் 3 ஆம் தேதி ஆமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளது.