டில்லி

ன்று சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் ரக்‌ஷா பந்தன் கொண்டாடி உள்ளார்.

 இன்று நாடு முழுவதும் சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். பெண்கள் ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்பு சகோதரிக்குப் பரிசு அளிப்பது வழக்கம்.

வட இந்தியாவில் இந்த பண்டிகை பிரபலமாக உள்ளது.  ஆயினும் சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.  இன்று நாடு முழுக்க ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்.

அவர் இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தனுக்கு பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் மாணவர்களை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து, அவர்களுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடினார்.  குடியரசுத் தலைவர் மாளிகையில், திரௌபதி முர்முவின் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் தொடர்பான அறிவிப்பு மற்றும் புகைப்படங்கள், டிவிட்டர் தளத்தில் டிவீட் செய்யப்பட்டு உள்ளது.