மும்பை

உத்தவ் தாக்கரே ஜனநாயகத்தை காப்பது மட்டுமே தங்கள் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்

நாளை முதல் இரு நாட்களுக்கு மும்பையில் நா இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து  கொள்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இன்று கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும்  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

உத்தவ் தாக்கரே அப்போது

“நடைபெற உள்ள 3-வது இந்திய கூட்டணி கூட்டத்தில் 28 கட்சிகள் சார்பில் 63 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். சித்தாந்தங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் வேறாக இருக்கலாம்; ஆயினும் ஜனநாயகத்தைக் காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. பாஜக அரசு இந்தியா கூட்டணியின் வளர்ச்சியைப் பார்த்து பயத்தில் இலவசமாகக் கூட எரிவாயு சிலிண்டர்களை கொடுக்கும்.”

என்று கூறினார்.