காஞ்சிபுரம்

நாளை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் வருவதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். காஞ்சிபுரத்திற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதாவது  காஞ்சிபுரத்தில் நாளை3) அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிமுதல் மாலை 3 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவே பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.